செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையிட்டார். ஜாமீன் கிடைக்கவில்லை. 3 முறை முயற்சித்து கிடைக்கவில்லை. அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றார். அங்கும் கிடைக்கவில்லை.
மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையில், அமைச்சர் பதவிதான் ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று தனது அமைச்சர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
இந்த முறை ஜாமீன் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்த அவரின் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது. அதில், ஜாமீனை தள்ளுபடி செய்த நீதிமன்றம், 8 மாதங்களாக குற்றம்சாட்டப்ப நபர் சிறையில் இருப்பதாக கூறுவதால், அவர் வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்கவும் உத்தரவிட்டது.
3 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் தள்ளுபடி செய்திருந்த நிலையில், தற்போது 2 வது முறையாக சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.