வங்கதேச கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்களாக டேவிட் ஹெல்ப், ஆண்ட்ரே ஆடம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் கொண்ட நீண்ட தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் மார்ச் 4ஆம் திகதி தொடங்குகிறது.
வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சந்திக ஹதுசிங்க (Chandika Hathurusinghe) உள்ளார்.
இந்த நிலையில் வங்கதேச அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங்க் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேட்டிங் பயிற்சியாளராகபெர்முடா அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஹெம்ப் (David Hemp) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 ஆண்டுகளுக்கு செயல்படுவார் என வாரியம் தெரிவித்துள்ளது.
அதேபோல், பந்துவீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் ஆல்-ரவுண்டர் வீரர் ஆண்ட்ரே ஆடம்ஸ் (Andre Adams) அணியில் இணைவார் என்றும் BCB கூறியுள்ளது.
இலங்கைக்கு எதிரான தொடரில் தங்கள் பணியை இருவரும் தொடங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.