இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ள நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார். அங்கிருக்கும் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பயணம் நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து இன்றிரவு 9.10 மணிக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜையில் பங்கேற்க உள்ளார்.
தொடர்ந்து அங்கிருக்கும் தனியார் ஓட்டலில் தங்குகிறார். பிரதமர் வருகையையொட்டி, மீனாட்சியம்மன் கோயிலுக்கு மாலை 4.30 மணி முதல் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சித்திரை வீதிகளில் கடை திறக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது.