ஜப்பானில் வேலை வாங்கி தருவதால இலங்கையர்களை ஏமாற்றி ரூ.100 கோடி மோசடி செய்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஜப்பானில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக கடவத்தை சேர்ந்த 51 வயது பெண், சுமார் 250க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்றுள்ளார்.
இதன் மூலம் ரூ.100 கோடி பெற்ற அவர், அதன் பின் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அந்த பெண்ணை பிடிக்க மஹர நீதிவான் நீதிமன்றத்தில் 36 பிடியாணைகளும், கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் 11 பிடியாணைகளும் பொலிசார் பெற்று வைத்திருந்தனர்.
இந்நிலையில், அந்த பெண் நீர்கொழும்பு-சிலாபம் வீதியில் உள்ள ஒரு வீட்டில் தலைமைறைவாக இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பின் உடனடியாக அங்கு சென்று சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர், கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, மார்ச் 7ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.