தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2024-25ம் நீதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை அம்மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(பிப்ரவரி 19) சற்று முன் தாக்கல் செய்தார்.
அதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்புகளில் இடம் பெற்ற முக்கிய அறிக்கைகளை இங்கு பார்ப்போம்.
➤அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசு வேலை
➤திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட ஆவீன் தொழிற்சாலைகளில் அதிநவீன தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும்
➤முதலமைச்சரின் இளைஞர் திருவிழா இனி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும்
➤திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை
➤சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.24,000 கோடி நிதி ஒதுக்கீடு
➤’சமூக பாதுகாப்புதுறை’, இனி ‘குழந்தைகள் நலன் துறை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
➤பழங்குடியினத்தவரை மேம்படுத்த ரூ.1,000 கோடி செலவில் தொல்குடி என்கிற திட்டம் கொண்டுவரப்படும்.
➤ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்
➤மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்
➤காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு
➤அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை
➤ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ₹2500 கோடி ஒதுக்கீடு
➤தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நியோ டைடல் பார்க். இதனால், 13,000 பேருக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு அறிவுப்புகள் உள்ளன.