அமெரிக்காவின் பொது ராஜதந்திரத்திற்கான துணை செயலாளர் எலிசபெத் எம்.அலன் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
இந்த மாதம் வெளிநாட்டிற்கு அரசு முறை பயணமாக இந்தியா, இலங்கை, ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை எலிசபெத் எம்.அலன் பயணம் செய்கிறார். American Embassy
இலங்கை வரும் அவர், இருநாடுகளுக்கிடையேயான கூட்டாண்மை மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும், அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
மேலும், இந்த பயணத்தின்போது, சிவில் சமூக உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இளைஞர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவார். மும்பை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் குழு விவாதத்திலும் கலந்துகொள்வார் என தெரிகிறது.