Home » இலங்கையை உலுக்கிய சம்பவம்: 3 பேரின் புகைப்படங்கள் வெளியீடு!

இலங்கையை உலுக்கிய சம்பவம்: 3 பேரின் புகைப்படங்கள் வெளியீடு!

by Vaishnavi S
0 comment

நாட்டின் பெலியத்த பகுதியில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பொலிசாரால் தேடப்படும் 3 பேரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பெலியத்த வலஸ்முல்ல வீதியில் இருக்கும் கஹவத்தை அதிவேக வீதி நுழைவாயில் அருகே 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 5 பேரை கொலை செய்ததாக சந்தேகப்படும் 3 பேரின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் தங்காலை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்: 071 8591488, நிலைய பொறுப்பதிகாரி ஃ பெலியத்த – 0718591497 எண்களுக்கு உடனடியாக தெரிவிக்கும்படி பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவரின் பெயர் பெயர், மஹகமகே தினேஷ் பிரியங்கர
டென்மார்க் காலனி, வேரகொட, கஹவ, அம்பலாங்கொடை பகுதியை சேர்ந்தவர்.

மற்றொரு நபர் பெயர் நாணாயக்கார அகரகே நிஷாந்த சமன் குமார் டயஸ், இலக்கம் 80, யாய 4, தம்புத்தேகம. இல 84, கல்பாத, அங்குருவெல்ல பகுதியை சேர்ந்தவர்.

மூன்றாவது நபரின் பெயர் ரன்முனி மகேஷ் ஹேமந்த சில்வா, இலக்க 107ஃ2ஃ டீ, புவக்கஹவத்த, மாகந்தன, ஊரகஹா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00