Home » 17 வயது டென்னிஸ் வீராங்கனை மயங்கி விழுந்து மரணம்!

17 வயது டென்னிஸ் வீராங்கனை மயங்கி விழுந்து மரணம்!

by Vaishnavi S
0 comment

பாகிஸ்தானில் 17 வயது டென்னிஸ் வீராங்கனை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாத்தில் ITF ஜூனியர்ஸ் J3 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

Zainab Ali Naqvi என்ற வீராங்கனையும் இதில் கலந்துகொண்டார். 17 வயதே ஆன இளம் வீராங்கனை Zainab,போட்டியின் நடுவே குளிக்க சென்றுள்ளார்.

ஆனால் Zainab தனது அறையில் மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட உதவியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் உடனடியாக Zainab-ஐ மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், Zainab ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Zainab இதய செயலிழப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ITF ஜூனியர்ஸ் போட்டியில் பங்கேற்க கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு வந்த இளம் டென்னிஸ் வீராங்கனை Zainab Ali Naqvi 12 பிப்ரவரி 2024 அன்று காலமானார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்’ என தெரிவித்துள்ளது.

 

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00