யாழ்ப்பாணத்தில் கார் ஒன்று ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம்-இணுவில் பகுதியிலேயே குறித்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து காரணமாக 3 பேர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், முதற்கட்ட தகவலின் படிய உயிரிழந்தவர்களில் ஒருவர் இணுவில் பகுதியை சேர்ந்த சயந்தன்(32), அவரது 6 மாத குழந்தை அப்சரா என்பது தெரியவந்துள்ளது.
ரயில்வே காப்பாளர் இல்லாததே, இந்த விபத்திற்கு காரணம் என் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், இது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.