எதிர்வரும் தேர்தல் குறித்து தன்னைப் பற்றி வரும் தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், “வரும் ஜனாதிபதி தேர்தலில், தான் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக, பொதுஜன முன்னனி கட்சியின் தலைமை பதவியை ஏற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன.
ஆனால், இதில் எதுவும் உண்மையில்லை. எந்த ஒரு கட்சிக்கும் சந்திரிக்கா ஆதரவு அளிக்க முடிவு செய்யவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால், சந்திரிக்கா ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு வழங்க உள்ளதாக தகவல் வெளியானது. அது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதன் காரணமாக இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு சந்திரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.