Home » இமாச்சலில் மாயமான சென்னை மேயர் மகன் சடலமாக மீட்பு

இமாச்சலில் மாயமான சென்னை மேயர் மகன் சடலமாக மீட்பு

by Vaishnavi S
0 comment

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் 8 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கார் விபத்தில் மாயமானார்.

அவர் சென்ற கார் கஷங் நாலா மலைப்பகுதியில் இருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இதில் ஓட்டுநர் தஞ்ஜின் உயிரிழந்த நிலையில், அவருடன் பயணித்த கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.

ஆனால் வெற்றி துரைசாமியை காணவில்லை. இதனையடுத்து அவரை தேடும் பணியில் பொலிஸார், மீட்புப்படையினர் தீவிரமாக இறங்கினர்.

இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

8 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின் அவரது உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00