Home » 50 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும் PSG

50 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும் PSG

by Vaishnavi S
0 comment

லிகு1 தொடரில் PSG அணி 3-1 என்ற கோல் கணக்கில் LOSC அணியை வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறது.

PSG மற்றும் LOSC அணிகள் மோதிய போட்டி Parc des Princes மைதானத்தில் நடந்தது.

இரு அணிகளும் சமபலத்துடன் களமிறங்கியதால் ஆரம்பத்திலேயே ஆட்டத்தில் அனல் பறந்தது.

LOSC அணி வீரர் யூசுப் யாசிஸி ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் கோல் அடித்தார். அவர் PSGயின் பாதுகாப்பு அரணை உடைத்து இந்த கோலினை அடித்தார்.

இதற்கு பதிலடியாக 10வது நிமிடத்திலேயே PSG வீரர் ராமோஸ் (Ramos) அபாரமாக கோல் அடித்தார்.

அதன் பின்னர் 17வது நிமிடத்தில் PSG அணிக்கும் Own Goal மூலம் இரண்டாவது கோல் கிடைத்தது.

LOSC அணி வீரர் அலெக்ஸ்சான்ட்ரோவின் காலில் பட்டு பந்து வலைக்குள் சென்றது. இறுதியாக ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் PSG வீரர் ராண்டல் கோலோ கோல் அடித்தார்.

இதன்மூக்கு PSG அணி 3-1 என்ற கோல் கணக்கில் LOSC அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

இது லிகு1 தொடரில் PSG 15வது வெற்றி ஆகும். மேலும் முதலிடத்தில் நீடிக்கும் அந்த அணி 50 புள்ளிகளை பெற்றுள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00