இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வர வாய்ப்பிருப்பதாக இந்தியாவின் ரோ உளவுப் பிரிவு தெரிவித்துள்ளதாக ஜேவிபியின் முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார்.
நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” எங்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார சமீபத்தில் இந்தியாவுக்கு சாதரணமாக செல்லவில்லை.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அவர்தான் என்பதை இந்திய ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்பித்ததால், அவரை அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு அழைத்ததன் காரணமாகவே சென்றார்.
இதனால், அடுத்த அரசாங்கம் எங்களின் தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி தலைமையிலான அரசாங்கமாகதான் இருக்கும்” என்றார்.