பிரித்தானியா மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் 3ம் சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டும். அதற்காக பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பல்வேறு நாட்டு தலைவர்களும் மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சார்லஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதால், பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
I join the people of India in wishing speedy recovery and good health to His Majesty King Charles III. https://t.co/86mKg9lE1q
— Narendra Modi (@narendramodi) February 6, 2024