159
இன்று இலங்கையில் 76வது சுதந்திர தினம் நாட்டின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு, கருப்பு தின பேரணியில் கலந்து கொள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
அதில், “தமிழர் தேசத்தின் மீது நூற்றாண்டு கடந்தும் சூழ்ந்துள்ள பேரினவாத தீயிலிருந்து தமிழர் தாயகத்தை காத்திட, தலைமுறைகள் தாண்டிய இனத்தின் இருப்புக்காக இன்று(பிப்.4) கிளிநொச்சி, இரணைமடு சந்தியிலிருந்து டிப்போ சந்தி வரை நடைபெறும் பேரணியில் பங்குகொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.