இலங்கையில் இன்று 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, வங்குரோத்தடைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்டிருந்தோம். ஆனால், தற்போது 76ஆவது சுதந்திர தினத்தில், பல இடர்பாடுகளுக்கு மத்தியில், அந்த நிலையிலிருந்து விடுபட்டு, பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது” என பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொழும்புவில் உள்ள காலி முகத்திடலில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன் பங்கேற்க உள்ளனர்.