Home » காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய காதலன் கைது

காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய காதலன் கைது

by Vaishnavi S
0 comment

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் IT ஊழியர் பெண்ணை சுட்டுக்கொன்ற அவரது காதலன் கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ரிஷாப் நிகாம். இவரும் வந்தனா திவிவேதி என்ற IT ஊழியர் இளம்பெண்ணும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 25ஆம் திகதி, புனே மாவட்டம் பிம்ப்ரி சிஞ்சவாத் நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

காதல் ஜோடி இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களை பகலில் சுற்றிவிட்டு அறைக்கு திரும்பியுள்ளது.

சனிக்கிழமை இரவு 10 மணியளவில், வந்தனா தனது அறையில் இறந்து கிடந்துள்ளார். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தெரிய வந்தது.

இதனையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக வந்தனாவின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் பொலிஸார் CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது நிகாம் சம்பவத்தன்று வெளியேறிய காட்சிகள் தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் தப்பியோடிய அவரை பொலிஸார் கைது செய்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது காதலி வந்தனாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்ததால் அவரை கொலை திட்டமிட்டு துப்பாக்கியுடன் அறைக்கு சென்று, இந்த பயங்கரத்தை அரங்கேற்றியுள்ளார் என தெரிய வந்தது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00