Home » இங்கிலாந்துக்கு எதிராக 421 ரன்கள் குவித்த இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிராக 421 ரன்கள் குவித்த இந்திய அணி

by Vaishnavi S
0 comment

ஹைதராபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்டில் இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களில் அவுட் ஆனதைத் தொடர்ந்து, ஜெய்ஸ்வால் அதிரடியாக 80 (74) ரன்கள் விளாசிய நிலையில், ஜோ ரூட் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து சுப்மன் கில் 23 ரன்களிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் குவித்தார். கே.எஸ்.பரத் தனது பங்குக்கு 41 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதன் பின்னர் ஜடேஜா அரைசதம் விளாசியதைத் தொடர்ந்து, இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்துள்ளது.

இதன்மூலம் இதுவரை இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00