Home » தம்பியை இரக்கமின்றி கொலை செய்த அண்ணன்!

தம்பியை இரக்கமின்றி கொலை செய்த அண்ணன்!

by Vaishnavi S
0 comment

பொரளை, செர்பான் டைன் வீதியிலுள்ள வீடொன்றில் மூத்த சகோதரன் தனது தம்பியை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார் என பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஐ.எச்.ஜயந்த (55) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் மது அருந்திக் கொண்டிருந்த போது மூத்த சகோதரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து சந்தேகநபரான மூத்த சகோதரன், தம்பியின் மார்பில் இடது பக்கத்தில் கத்திரிக்கோலால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

59 வயதுடைய சந்தேகநபர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தரிக்கோலுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00