Home » கணவரின் மரணத்தால் இறந்த பெண்..ஒரே குழியில் அடக்கம்

கணவரின் மரணத்தால் இறந்த பெண்..ஒரே குழியில் அடக்கம்

by Vaishnavi S
0 comment

தமிழக மாவட்டம் வேலூரில் அடுத்தடுத்து உயிரிழந்த கணவன் மனைவி ஒரே குழியில் புதைக்கப்பட்டனர்.

இறப்பிலும் இணை பிரியாத தம்பதிக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தி அடக்கம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்து (85). இவர மனைவி ராஜம்மாள்.

முத்து கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் காலமானார்.

கணவரின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாத அவரது மனைவி ராஜம்மாள், முத்துவின் உடல் அருகிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

அவரை எழுப்ப முயன்றபோது அவரும் உயிரிழந்தது அப்பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

இத்தனையடுத்து, மரணத்திலும் பிரியாத முத்து – ராஜம்மாள் தம்பதிக்கு அப்பகுதி மக்கள் உரிய மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், ஒரே வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, அவர்களின் உடல்களை சுடுகாட்டில் ஒரே குழியில் அடக்கம் செய்தனர்.

மறைந்த முத்து – ராஜம்மாள் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00