Home » சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய பழங்கள்

சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய பழங்கள்

by Vaishnavi S
0 comment

சர்க்கரை நோய் வந்துவிட்டால் நாம் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக் கொள்வது முக்கியம்.

அதற்காக என்ன சாப்பிட வேண்டும், அதனை எவ்வளவு சாப்பிட வேண்டும் போன்ற விடயங்களை ஆராய வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியை பழங்கள் கொடுக்கின்றன. எனினும் குறிப்பிட்ட பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.

ஆப்பிள், ஆரஞ்சு ஆகிய இரண்டு பழங்களும் சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த வகையில் என்பதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஆப்பிள்:

ஆப்பிளில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளதால், இது சர்க்கரை செரிமானத்தை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது.

இதனை சாப்பிடுவதன் மூலம் நார்ச்சத்து உள்ளதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

மேலும் இதில் உள்ள பாலிஃபீனால்கள் இன்சுலின் உற்பத்திக்கு காரணமான பீட்டா செல்கள் சேதமடைவதைத் தடுக்கின்றன.

ஆப்பிளை ஒரு கைப்பிடி உலர் பழங்கள் மற்றும் சீஸ் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

ஆப்பிளை எப்போதும் தோலுடன் தான் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் தான் அதில் உள்ள நார்ச்சத்தை பெற முடியும்.

ஆரஞ்சு:

ஆரஞ்சு பழம் சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.

இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இது ஃபோலேட் இரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும் உதவுகிறது. அத்துடன் இதில் 238 மி.கி பொட்டாசியமும் உள்ளது.

இந்த பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.

(குறிப்பு: இந்த இரண்டு பழங்களையும் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. அதேபோல் இரவு நேரத்திலும் சாப்பிடக் கூடாது)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00