முல்லைத்தீவிவு மாவட்டத்தில் பெண்மீது கணவர் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
குறித்த பெண் வைத்தியசாலைக்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்த போது கணவரால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், படுகயாமடைந்த பெண் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு செல்வபுரத்தினை சேர்ந்த கணவன், குடும்ப முரண்பாட்டினால் குடும்பத்தினரை விட்டுபிரிந்து வாழ்ந்துள்ள நிலையில் மனைவியிடம் ஏற்பட்ட முன்கோபம் காரணமாக கத்தியால் தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் வருகை தந்து கணவனை கைதுசெய்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.