Home » முன்னாள் காதலரை திடீரென நேரில் அழைத்த மாணவி..பொய் குற்றச்சாட்டில் கைது செய்த பொலிஸ்..

முன்னாள் காதலரை திடீரென நேரில் அழைத்த மாணவி..பொய் குற்றச்சாட்டில் கைது செய்த பொலிஸ்..

by Vaishnavi S
0 comment

இந்திய மாநிலம் தெலங்கானாவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது முன்னாள் காதலனை பழி வாங்க கஞ்சா வழக்கில் சிக்க வைத்ததால் கைது செய்யப்பட்டார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டம் படித்து வருபவர் ஷ்ரவன்.இவர் ரிங்கி என்ற சக கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்.

ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன் இருவரும் தங்கள் காதலை முறித்துக் கொண்டனர். இதனால் பல சந்தர்ப்பங்களில் ஸ்ரவனை பழிவாங்க முயற்சித்துள்ளார்

இறுதியாக திடீரென போன் செய்து நேரில் சந்திக்க முன்னாள் காதலரை அழைத்துள்ளார்.

உன்னிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேச வேண்டும் வா” எனக் கூறியதால் ஷ்ரவனும் அவரது பேச்சி நம்பி அவர் கூறிய பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு ரிங்கி அவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அச்சமயம் ரிங்கியின் நண்பர்கள் ஐவர் ஷ்ரவன் வந்த காரில் 40 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலத்தை போட்டுவிட்டு ஓடியுள்ளனர்.

பின்னர் அவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் ஷ்ரவனின் காரை சோதனை செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது நடந்த சம்பவங்களை ஷ்ரவன் விளக்கியுள்ளார். உடனே பொலிஸார் ரிங்கியை பிடித்து விசாரித்தபோது, முன்னாள் காதலனை பழி வாங்க கஞ்சா கடத்தல் பழியை சுமத்தியதாக ஒப்புக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ரிங்கி மற்றும் அவரது ஐந்து நண்பர்களையும் பொலிஸார் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் காதலனை பழி வாங்க கல்லூரி மாணவி கஞ்ச வழக்கில் சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00