களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
கரவிட்ட, மல்காவை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த 24 ஆம் திகதி இரவு களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகர் களுத்துறை வடக்கு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும், இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு தலைமை பொலிஸார் பரிசோதகர் தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.