மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் காரணமாக கைதியொருவர் உயிரிழந்தார்.
மேலும் எட்டு பேர் மூளைக்காய்ச்சல் காரணமாக கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.
உயிரிழந்த கைதி மூளைக்காய்ச்சல் காரணமாக மாத்தறை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (22) அவர் உயிரிழந்தார்.
கொலை குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு உயிரிழந்தார்.