Home » நாடு கடத்தப்படுகிறார் முருகன்?

நாடு கடத்தப்படுகிறார் முருகன்?

by Vaishnavi S
0 comment

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றமசாட்டப்பட்டு, சிறையில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான முருகனை பிரித்தானியாவுக்கு நாடு கடத்த முடியாது என இந்திய மத்திய அரசு சென்னை மேமேல்நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.

இருப்பினும், அவரை நாடு கடத்துவதாயின், அவரது தாய்நாடான இலங்கைக்கு கடத்த முடியும் எனவும் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட முருகன், தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் குறித்த விடயத்தை மன்றுரைத்துள்ளார்.

அதில், முருகன் இந்தியாவிலிருந்து வெளியேறி பிரித்தானியாவிற்கு செல்வதற்கான பயண ஆவணங்களை கோருகிறார். அத்தகைய அனுமதி அல்லது வெளியேறும் உத்தரவை எம்மால் வழங்க முடியாது. இருப்பினும், இந்திய வெளியுறவுத்துறை இலங்கை உயர் ஸ்தானிகரகத்துக்கு அவரது ஆவணங்களை அனுப்பியுள்ளது என குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கை உயர்ஸ்தானிகரகம், முருகனுக்கு கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்களை வழங்கினால் மட்டுமே, இந்திய வெளியுறவு அமைச்சு அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடரமுடியும் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அமைந்துள்ள வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் தற்போது முருகன் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் பிரித்தானியாவில் வசிக்கும் தனது மகளுடன் வெளிநாடு செல்ல அனுமதி கோரி முருகன் விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக, முருகன் சென்னைக்கு செல்லும்போதெல்லாம், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்ததுடன், முருகனின் மனுவை சென்னை மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00