154
தமிழகத்தின் கிருஷ்ணகிரி அருகே தந்தை ஒருவர் தன் குழந்தைகளுக்கு பிரசாதத்தில் விஷம் வைத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே என்.தட்டக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கடலரசு (32). இவரது மனைவி தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்த ஜனனி (23).
இருவருக்கும் 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது பிள்ளைகள் திவான்ராஜ் (4) மற்றும் நிவன்திகா (2)
கூலித்தொழிலாளியான கடலரசு மனைவியி யுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.
கடந்த மாதம் இருவருக்குமிடையே நடந்த தகராறில் கோபித்துக் கொண்டு ஜனனி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இரு வீட்டாரும் அவர்களை சமாதானம் செய்த பின்னர், ஜனனி ஒரு வாரத்திற்கு முன்பு கணவருடன் வந்து வசித்து வந்தார்.
இந்நிலையில் பெரியமலை தீர்த்தம் கோவிலுக்கு தனது குடும்பத்தை கடலரசு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கே மலையடிவாரத்தில் வழங்கப்பட்ட பிரசாதத்தில், கடலரசு விஷம் கலந்து தன் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.
அதனை உண்ட குழந்தைகள் அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர்.
ஆனாலும் கடலரசு, உயிருக்கு போராடிய குழந்தைகளை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் விஷம் கலந்த பிரசாதத்தை மனைவிக்கும் கொடுத்து தானும் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட ஜனனியின் அலறிய சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் நாகரசம்பட்டி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கே விரைந்த காவலர்கள் கணவன் மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் உயிரிழந்த இரு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன் மனைவி தகராறில் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.