ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வரும் இந்தியர் ஒருவர் லொட்டரியில் 33 கோடி ரூபாய் வென்றுள்ளார்.
Al Ain-யில் கட்டிடக்கலை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இந்தியர் ராஜீவ் அரிக்காட்.
இவர் மூன்று ஆண்டுகளாக The Big Ticket அபுதாபி வாராந்திர குலுக்கல் லொட்டரியில் பங்கேற்று வந்தார்.
இவர் சமீபத்தில் தன் குழந்தைகளின் பிறந்த திகதியான 7 மற்றும் 13 எண்களைகொண்ட லொட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
அதன் பின்னர் அவர் தனது அன்றாட வேலைகளை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் அவர் வாங்கிய லொட்டரி டிக்கெட்டுக்கு தற்போது 33 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
பரிசு வென்றது குறித்து ராஜீவ் அரிக்காட் கூறுகையில்,
‘நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக Al Ain-யில் வசிக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக டிக்கெட் வாங்குகிறேன்.
ஆனால் லொட்டரியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
நானும் என் மனைவியும் 7 மற்றும் 13 எண்கள் கொண்ட டிக்கெட்டுகளைத் தேர்ந்தெடுத்தோம். அது எங்களின் குழந்தைகள் பிறந்த திகதிகள்.
2 மாதங்களுக்கு முன்பு அதே கலவையுடன் ஒரு Whisker மூலம் ஒரு மில்லியன் திர்ஹம்ஸை நான் தவறிவிட்டேன். ஆனால் இந்த முறை நான் அதிர்ஷ்டசாலி’ என தெரிவித்துள்ளார்.