76
அமெரிக்காவில் சோதனைக்காக காவலர்கள் சென்றபோது வீடு ஒன்று வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள ஆர்லிங்டனில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக காவல்துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த வீட்டிற்கு காவலர்கள் விரைந்தனர்.
காவலர்கள் வீட்டை சோதனையிட முயலும்போது, அவர்களை வீட்டினுள் இருந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதன் பின்னர் வீட்டில் பெரும் வெடிப்பு நிகழ்ந்தது.
வெடிப்பானது மிகப்பெரிய அளவில் கூரைகளை தூக்கியெறிந்து, வீட்டினை குப்பை மேடாக்கியது.
இந்த வெடிப்பினால் அக்கம்பக்கத்தினர் பீதியில் உறைந்தனர்.
மர்ம நபர் தப்பித்தாரா இல்லை வெடிப்பில் சிக்கி உயிரிழந்தாரா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
காவல்துறையினர் சோதனையிட வந்ததும், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை அந்த மர்ம நபர் வெடிக்க வைத்திருக்கலாம் என்று காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த வெடிப்பு குறித்து காவல்துறை சார்பில் கூறுகையில், உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவிலான காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.