கணவரை பிரிவதாக அறிவித்த பிரபல இளம் தமிழ் நடிகை!

நடிகை ஷீலா தனது கணவரை பிரிவதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 தமிழில் நம்ம வீட்டு பிள்ளை, திரௌபதி, மண்டேலா, நூடுல்ஸ் போன்ற படங்களில் நடித்தவர் ஷீலா ராஜ்குமார்.
இவர் நடிப்பு பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை ஷீலா திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் ஷீலா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், ”திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன், நன்றியும் அன்பும் சோழன்” என பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் அவர் தனது கணவரை விவகாரத்து செய்யப் போகிறார் என்று தெரிய வந்துள்ளது.
ஆறாது சினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷீலா ராஜ்குமார், ஒரு பாரதநாட்டிய கலைஞர் ஆவார்.
டூலெட் படத்தின் மூலம் கதாநாயகி ஆன இவர், கடைகள் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
எனவே அவரது விவாகரத்து முடிவு ரசிகர்கள் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related posts

அரண்மனை 4 திரை விமர்சனம்!

ஒரு நொடி திரை விமர்சனம்

கள்வன் – திரை விமர்சனம்