ஸ்மார்ட்போன் பயனர்கள் 5 ஆண்டுகள் தான் பயன்படுத்த வேண்டும்

இந்திய அரசாங்கம் ஸ்மார்ட்போன் தொடர்பில் புதிய விதியை அமுல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, ஸ்மார்ட்போன் பயனர்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என புதிய விதியை, இந்திய அரசு கொண்டுவர உள்ளது.

இதற்கு காரணம், ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் 5 ஆண்டுகளுக்கு பின் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் என்றும், இதனால் மனிதர்களின் மூளை, இதயம் மற்றும் உறக்கம் போன்றவை பாதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதிய விதியின்படி, நீங்கள் Iphone உட்பட எந்த Brand-யின் ஸ்மார்போனை வாங்கினாலும், அதை கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு பின் மாற்ற வேண்டும் என பரிந்துரைக்கிறது.

நீங்கள் பயன்படுத்திய ஸ்மார்ட்போன் சாதனத்தை கட்டாயமாக Exchange செய்தோ அல்லது Recycling-கிற்கு வழங்கியோ, அதற்கு ஏற்ப தொகையை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. அத்துடன் புதிய ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம்.

இந்திய அரசு கட்டாயமாக ஸ்மார்ட்போனை மாற்றும் இந்த புதிய விதியை கொண்டு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீப காலமாக வெளிவரும் ஸ்மார்ட்போன்களின் தரம், 5 ஆண்டுகள் மட்டுமே நீடிப்பது போல் உருவாக்கப்படுவதாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!