குறைகிறது! இலங்கை மக்களுக்கு நிம்மதி தரும் தகவல்

நாட்டில் மின்சார கட்டணம் குறைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் எளியாகியுள்ளது.

மின்சார கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வரும் பிப்ரவரி 28ம் தேதி ஒன்றுகூட உள்ளது. இதில், மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பான இறுதிதீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனைகள் கடந்த 22ம் தேதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்துஇ தற்போது கட்டணம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

தவறான புள்ளிவிவரங்களை வைத்து, நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கடுமையாக அரசை குற்றம்சாட்டியிருந்தார்.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!