மார்ச் முதல் பணவரவை தாராளமாக பெறப்போகும் ராசிகள்

புதன் கடந்த பிப்ரவரி 20ஆம் திகதி சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார்.

மார்ச் 7ஆம் திகதி வரை அதில் இருந்து, பின் குரு பகவானின் ராசியான மீன ராசிக்கு செல்வார்.

ஒவ்வொரு முறை புதன் ராசியை மாற்றும் போதும் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபரம் போன்றவற்றில் அதன் தாக்கம் இருக்கும்.

இந்த நிலையில் மூன்று ராசிகள் நிதி நன்மையை பெறப்போகிறார்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

இக்காலகட்டத்தில் புதிய தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்.

பணியில் உள்ளவர்களுக்கு புதனின் அருளால் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிகளின் நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும்.

நிதி நிலை வலுபெறுவதுடன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

தொழிலில் முதலீடு செய்தால் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பணியில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருப்பதுடன் சிலர் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.

பயணங்கள் மூலம் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை ஆகும். எனவே, நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024