வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களின்போது சில சமயங்களில், ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கைகள் நிகழும்.
இவ்வாறான சேர்க்கையின்போது உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
கும்ப ராசியில் சனி பகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பின் பயணித்து வருகிறார்.
அதேபோல் சூரியனும், புதனும் கும்ப ராசியில் அடுத்த மாதம் நுழைய உள்ளனர். இதன்மூலம் திரிகிரக யோகம் உருவாக உள்ளது.
மேலும், சில ராசிகள் இந்த யோகத்தினால் அதிர்ஷ்டம் பெறுவார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் எதிர்பாராத பல நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.
சிலருக்கு வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.
வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதுடன், வாழ்க்கைத் துணையுடனான வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்களுக்கு பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
இவர்கள் கடின உழைப்பால் நிறைய பணத்தை ஈட்டுவர்.
வெளிநாட்டில் சொத்து வாங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறும்.
மேலும், இவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
மிதுனம்
திரிகிரக யோகத்தினால் மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள்.
நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதுடன் ஏராளமான நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சிலருக்கு இந்த யோகத்தினால் பணக்காரராகவும் வாய்ப்பு உள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற அனுமானங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளதால் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)