ஜெயக்குமார் காரை பின்தொடர்ந்த வாலிபர்கள்!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கில் 10 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையிலும் இதுவரை உறுதியான முடிவுக்கு வரமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒரு சிறப்பு தனிப்படையை போலீசார் அமைத்துள்ளனர். அவர்கள் புதிய கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கரைசுத்துபுதூருக்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் கிலோ மீட்டர் சுற்றளவிற்கு விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர்.

இந்நிலையில் திசையன் விளை ஜவுளிக்கடை, இட்டமொழியில் உள்ள அரசு வங்கி, ஆனைகுடி நகைக்கடை உள்பட வழிநெடுகிலும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் தலைமையிலான 3 தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.

இதில் மாயமான அன்று ஜெயக்குமார் காரில் அந்த வழியாக சென்ற காட்சிகளும், சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரையிலும் அவரை பின்தொடர்ந்தபடியே ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளன.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!