அந்தரத்தில் தேவதைகள் போல தொங்கிய பெண்கள்! வித்தியாச திருமண நிகழ்வுக்கு நெட்டிசன்கள் கண்டனம்..

வித்தியாசமான முறையில் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு ஒன்று நடத்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் Pre-Wedding Photoshoot எனும் திருமண நிகழ்வு குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

நிகிதா என்பவர் தான் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் Share செய்திருக்கிறார். அந்த வீடியோவில் மண்டபம் ஒன்றில் மக்கள் கூடியிருக்கின்றனர். அங்கு மணமக்கள் நிச்சயதார்த்தத்திற்காக மோதிரம் மாற்றிக் கொள்ள தயாராகி இருக்கிறார்கள்.

அவர்கள் இருக்கும் இடம் வண்ண வண்ண மலர்கள், விளக்குகளின் அலங்காரத்தினால் முழு மண்டபமே சொர்க்கத்தைப் போல் காட்சி அளித்தது.

மேலும் பெரிய பெரிய மரங்கள், செடிகள், கொடிகள் போன்ற அலங்காரங்கள் ஒரு பக்கமும், சிறிய பெரிய விளக்குகள் மறுபக்கமும் நீண்டு வளர்ந்து காணப்படுகின்றன.

ஆனால் சில பெண்கள் அங்கு அந்தரத்தில் தொங்கிக் கொண்டு, தேவதைகள் போல உடையணிந்து கையில் மலர்களுடன் இருப்பது தான் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அதாவது அப்பெண்கள் கயிற்றில் தொங்கவிடப்படுவது மனிதாபிமானமற்ற செயல் என்றும், ஒரு மனிதனை ஒரு காட்சி பொருளாக கருதுவது சரியா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் நிகிதா தனது பதிவில், ‘இந்த பெண் கலைஞர்கள்; இதற்காகவே Special Training எடுத்த தொழில் வல்லுநர்கள். இதற்கு முன்பு நிறைய ஒத்திகைகள், பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன’ என கூறினார்.

எனினும் அவரது கருத்தினை யாரும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/CzgtjALxLnh/

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!