4 வயது மகனை கொன்ற பெண்ணுக்கு சிறை

கோவாவில் தனது 4 வயது மகனை கொலை செய்த பெண் நீதிமன்ற விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்பில், அவரது கணவர் விசாரணையில் சில விடயங்களை தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் வசித்து வந்த சுசனா சேத் (39) என்ற தனியார் நிறுவன CEO, கணவர் மீதான வெறுப்பினால் தனது 4 வயது மகனை இரக்கமின்றி கொலை செய்தார்.

மேலும், அதனை மறைக்க அவர் சடலத்தை சூட்கேசில் அடைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சுசனாவை கைது செய்த பொலிஸார் அவரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்ததில், அவரது கைப்பையில் இருந்து கிழிந்த tissue paper ஒன்றை கைப்பற்றினர்.

அதில், தன் கணவர் மகனை சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது தனக்கு பிடிக்கவில்லை என கண் மையால் எழுதியிருந்ததால் அதனை முக்கிய ஆதரமாக வைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, சுசனா சேத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின் நீதிபதியின் உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் சுசனாவின் கணவர் வெங்கட்ராமன், கோவாவில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

அவர் பொலிசார் விசாரித்தபோது, தனக்கும் தன் மனைவி சுசனா சேத்துக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்தாக கூறினார்.

அத்துடன், தனது மகனை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது எனவும், ஆனால் அதற்கு தன் மனைவி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் எனவும் கூறிய வெங்கட்ராமன், கடந்த 5 நாட்களாக அவர் தன் மகனை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை என்றும், தன் மகன் கொலை செய்யப்பட்டபோது, இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் இருந்ததாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!