மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..

Police line do not cross

மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதம், கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியில் புகையிரத கடவையில் வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!