மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால், பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது.
ஆனால், அந்த கூட்டணியில் உள்ள மம்தா பேனர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட சில முக்கிய கட்சி தலைவர்கள் காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளதால், இந்த கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் உள்ளது.
அதே சமயம், பாஜக மக்களவை தேர்தலுக்கான வேலைகளை, சத்தம் இல்லாமல் வலுவாக செய்து வருகிறது என்றே கூறலாம்.
இந்நிலையில், பிரபல தனியார் ஊடகமான தந்தி டிவி, அடுத்து யார் பிரதமர் ஆக வேண்டும் என்று தமிழ்நாட்டில் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.
அதில், 68% பேர் ராகுல் காந்தி, 28% பேர் மோடி, 4% பேர் மற்றவர்கள் வர வேண்டும் என கூறியுள்ளனர். கடந்த மே முதல் டிசம்பர் வரை நடத்தப்பட்ட கருத்துகணிப்புகளில் ராகுல்காந்தியே முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.