ஜனாதிபதி தேர்தல் எப்போது? ஹரின் தகவல்

இலங்கையில் ஜானதிபதி தேர்தல் வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று நம்புவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “சமீபத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை முழுவதும் மீள்வதற்கு ரணில் விக்ரமசிங் மீண்டும் ஜனாதிபதியாவது அவசியம்.

மற்ற கட்சி உறுப்பினர்களும் முயற்சி செய்யலாம். ஆனால், என்னுடைய பார்வையில் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற தற்போதைய ஜனாதிபதியான ரணிலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தேவை. இதுவரை ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கை நாட்டை முன்னோக்கியே கொண்டு சென்றுள்ளது என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார். வரும் ஒக்டோபர் 14ம் தேதிக்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும்” என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!