எனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியபோது.. மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்

நீங்கள் பிறருக்காக வாழும் போது சுயநலமாக இருக்க மாட்டீர்கள் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஆஸ்கர் விருதுகளை வென்றதன் இவர் ஆஸ்கர் நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

AR Rahman At The ‘Marvel Anthem’ Launch

திலீப் குமார் எனும் இயற்பெயர் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் தனது 57வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அனைத்து ரசிகர்களும் விருப்பக்கூடிய நபராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், தற்கொலை எண்ணம் தோன்றியது குறித்து மனம் திறந்துள்ளார்.

அவர் கூறும்போது, “எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியபோது, என் தாய் என்னிடம் ‘நீ மற்றவர்களுக்காக வாழும்போது உனக்கு இது போன்ற எண்ணங்கள் தோன்றாது’ என்று என்னிடம் கூறினார்.

உண்மையில் நீங்கள் பிறருக்காக வாழும்போது சுயநலமாக இருக்கமாட்டீர்கள்.

ஒருவருக்காக இசையமைப்பதாக இருக்கலாம், உணவு வாங்கி கொடுக்கலாம் அல்லது வெறும் புன்னகையை உதிர்க்கலாம்.

இதுபோன்ற விடயங்கள் தான் வாழ்க்கையுடன் உங்களை பயணிக்க வைக்கும்” என தெரிவித்துள்ளார்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!