வீடுகளில் பல்லிகள் சத்தம் போட்டால் நல்லது என்று பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். ஆனால், திசைகளை பொறுத்து பலன்கள் மாறுபடுகிறது.
அதன்படி, எந்த திசையில் சத்தம் போட்டால் என்ன பலன் என்பதை பார்ப்போம்.
➢வீட்டின் குபேர மூலையான தென்மேற்கு திசையில், பல்லிகள் சத்தம் போட்டால் விருந்தினர்கள் வருவார்கள். நன்மைகள் ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளது.
➢தென்கிழக்கு திசையில் சத்தம் போட்டால் வீட்டில் பிரச்சனைகள் வரலாம்.
➢கிழக்கு திசையில் பல்லிகள் சத்தம் போடுவது நல்லது கிடையாது. இதனால், கெட்ட செய்திகள் வரலாம்.
➢வாயு மூலையான வடக்கு திசையில் சத்தம் போட்டால் வீட்டில் நல்லது நடக்கும். ஏதேனும் சுப செய்திகள் தேடி வரும்.