பரசூட்டில் பறந்த விமானப்படை வீரருக்கு ஏற்பட்ட நிலை!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் இலங்கை விமானப்படையின் கண்காட்சியில் பரசூட்டில் பறந்த விமானப்படை சாகச வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் “நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் நேற்று (6) ஆரம்பமானது.

கண்காட்சியின் போது, பரசூட்டில் பறந்து சாகசத்தில் ஈடுபட்ட விமானப்படை சாகச வீரர் விபத்திற்குள்ளானார். இந்நிலையில், அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கண்காட்சி, எதிர்வரும்(10) ஆம் திகதி வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!