மாயாவிற்கு ஆதரவாக விக்ரம்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் வந்த பின்னர் மாயாவிற்கு ஆதரவாக விக்ரம் பேசியதை அவரின் தங்கை பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி பல நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா, விஜய் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தான் கடைசி வாரம் என்பதால் வெளியில் சென்ற போட்டியாளர்கள் உள்ளே வர ஆரம்பித்து விட்டனர்.

அப்போது முக்கிய போட்டியாளராக இருந்து வெளியே சென்ற விக்ரம் உள்ளே வந்தவுடன் மாயாவிடம் மன்னிப்பு கேட்டு அவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

விக்ரம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு எதிராக பல வேலைகளை மாயா-பூர்ணிமா இருவரும் செய்தனர். இதனால் விக்ரம் வீட்டிலுள்ளவர்கள் கடும் கோபத்தில் வீட்டிற்குள் வந்து விக்ரமை எச்சரித்தார்கள்

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!