நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சீமான் மீதான வழக்கினை கர்நாடகாவில் தொடர உள்ளதாக பேசியுள்ளார்.
சீமான் மீதான தனது புகார் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், காவல்துறை நடவடிக்கை குறித்து தெரியவில்லை என்றும் நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், விஜயலட்சுமி மீண்டும் ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘சீமான் ஒருபக்கம்; நாம் தமிழர் கட்சியினர் ஒரு பக்கம் திமிர் பிடித்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
12 ஆண்டுகளாக இந்த வழக்கில் நியாயம் கிடைக்காமல் பெண்ணான நான் கதறிக் கொண்டிருக்கிறேன்.
இது ஒன்றும் தீர்க்க முடியாத வழக்கு அல்ல. காவல்துறைக்கு தெரியும் இல்லையா? தமிழ்நாட்டில் சீமானுக்கு பயந்து வாழ்வதற்கு கூட யாரும் வீடு தரவில்லை. தூக்கி கர்நாடகாவில் போட்டார்கள்.
கர்நாடகா தான் என்னை காப்பற்றியது. எனது அம்மாவுக்கு இறுதிச் சடங்கு செய்ய விடாமல் தடுத்தார்கள்’ என கூறியுள்ளார்.
மேலும் அவர், “கர்நாடகாவில் பிறந்த ஒரே காரணத்திற்காக 12 ஆண்டுகளாக எனக்கு நியாயம் தேடி தராமல் அலைக்கழிக்கின்றனர். இதற்கு நான் முடிவு கட்டுவேன்.
கர்நாடகாவில் வழக்கு தொடர்ந்து உங்களுக்கெல்லாம் நான் அதிர்ச்சி கொடுக்க போகிறேன்” எனவும் கூறியுள்ளார்.
விஜயலட்சுமியின் இந்த ஆவேசமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.