நடிகர் போண்டா மணி மறைவிற்கு விஜயகாந்த் இரங்கல்!

நடிகர் போண்டா மணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்இ அவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் போண்டா மணி காலமானார்.

அவரது மறைவிற்கு திரையிலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள் செந்தில், சிங்கமுத்து, சிசர் மனோகர் உள்ளிட்டோர் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தனர்.

அதேபோல் திரையிலகினர் பலரும் போண்டா மணி குடும்பத்திற்கு உதவ முன் வந்துள்ளனர்.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் போண்டா மணியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

மேலும் தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

விஜய் படத்தில் கமல்ஹாசன்?