இன்று முதல் அமுலாகிறது வட் திருத்தம்!!

புதிய வட் வரி திருத்தம் இலங்கையில் இன்று முதல் அமுலாகிறது.

வட் வரியை அதிகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம், பாராளுமன்றத்தில் கடந்த மாதம் 11ம் திகதி நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, இதுவரை 15 விதமாக அமுலில் இருந்த வட் வரி, இன்று முதல் 18 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ் வரி விதிப்பில், இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றுக்கும் வட் வரி அமுலாகியுள்ளது.

குறிப்பாக, எல்பி கேஸ், பெட்ரோல், டீசல் ஆகியன, அனைத்து கையடக்க தொலைபேசிகள், மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள், மருந்து உற்பத்தி இயந்திரங்கள் எம்புலன்ஸ்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கான, இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இயந்திரங்கள், சோலார் பேனல்கள், வீட்டு சூரிய சக்தி அமைப்புகள் ஆகியவற்றுக்கு புதிய VAT அமுலாக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, நகைகள், மென்பொருள், கொப்பரா, ரப்பர், முட்டை, தேயிலை, தேங்காய் எண்ணெய், திரவ பால், காலணி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முடிக்கப்பட்ட தோல், கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலைப் பொருட்கள் ஆகியவையும் வட் வரி அதிகரிக்கும் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் வழங்கப்படும் சேவைகள், பயண முகவர் நிறுவனங்களால் வழங்கப்படும் தொடர்புடைய சேவைகள், திரைப்பட விநியோகம், கண்காட்சி மற்றும் ஆய்வக வசதிகள் மீதும் வட் வரி விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் தானியங்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அதிபோசனை உணவுகள், தேசிய தேங்காய் எண்ணெய் ஆகியனவுக்கும் வட் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதேவைளை, சிறப்பு வணிக வரிக்கு உட்பட்ட பொருட்களுக்கு வட் வரி அதிகரிப்பு விலக்களிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வட் வரி அதிகரிப்பால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!