பிரித்தானியா செல்வோர் கவனத்திற்கு!

பிரித்தானியாவில் அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் 7 வீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

அதன்படி, 16 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான ஒன்லைன் விண்ணப்பங்களுக்கான கட்டணம், 82.50 பவுண்டுகளிலிருந்து 88.50 பவுண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், வெளிநாடுகளிலிருந்து தபால் வழியாக கடவுச்சீட்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கான கட்டணமும் மேற்குறிப்பிட்ட அளவிலேயே அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த கட்டண உயர்வு, ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கடவுச்சீட்டு கட்டணங்கள் சுமார் 9 சதவீதம் வரை அதிகரித்த நிலையில், தற்போது அவை மீண்டும் 7 சதவீதத்தால் உயர இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பிரித்தானியாவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகுவதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!