“உதயநிதி என்னை அழைக்கவில்லை” நடிகர் சூரி ஆதங்கம்!

வரும் லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்து வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் நடிகர் சூரி திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்கிறாரா? என்ற கேள்விக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தென்மாவட்டங்களில் இருந்து தொடங்கி உள்ளார். முதலில் ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் லோக்சபா தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, நடிகர் சூரி சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கும், நடிகர் சூரிக்கும் இடையே நெருக்கமான நட்பு உள்ள நிலையில் வரும் லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர் ‛நண்பர் உதயநிதி பிரசாரத்துக்கு அழைத்தாரா?” என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு நடிகர் சூரி, ‛‛அவர் என்னை அழைக்கவில்லை. சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறேன் என்பது அவருக்கு தெரியும். இதனால் படப்பிடிப்பை பாருங்கள் என்று அவர் சொல்லிவிடுவார்.

அவருக்கு என்னுடைய வாழ்த்து எப்போதும் இருக்கும்” என்றார். இதன்மூலம் நடிகர் சூரியை, உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

ஆனாலும் நடிகர் சூரி கூறிய, ‛‛அவர் என்னை அழைக்கவில்லை” என்ற வார்த்தை தற்போது கவனம் பெற்றுள்ளது. ஒருவேளை உதயநிதி ஸ்டாலின் அழைத்தால் நடிகர் சூரி பிரசாரம் செய்ய ஆர்வமாக இருக்கிறாரா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!