Paarl Royals அணியை நிலைகுலைய செய்த இருவர்

SA20 தொடரில் நடந்த போட்டியில் Paarl Royals அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய Paarl Royals அணியில் ஜேசன் ராய் அதிரடியாக 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் கேப்டன் மில்லரை தவிர ஏனைய வீரர்கள் நிதானமாக நின்று விளையாடவில்லை.

இதனால் அந்த அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 40 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார்.

ஜோபர்க் தரப்பில் சாம் குக் 4 விக்கெட்டுளும், பர்கர் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய ஜோபர்க் அணியில் தொடக்க வீரர்களான லீஸ் டூ ப்ளூய் (Leus Du Plooy) மற்றும் பாப் டூ பிளெஸ்ஸிஸ் அரைசதம் விளாசினர்.

இதன்மூலம் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் (13.2 ஓவர்) எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

ப்ளூய் 68 (43) ரன்களும், பாப் டூ பிளெஸ்ஸிஸ் 55 (34) ரன்களும் விளாசினர். இது ஜோபர்க் அணிக்கு 3வது வெற்றி ஆகும்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!